Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டுப் பெண்ணுக்கு 50 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டுப் பெண்ணுக்கு 50 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

சட்டவிரோதமாக பல்மருத்துவ சேவைகளை வழங்கிய குற்றத்திற்காக அந்நிய நாட்டுப் பெண் ஒருவருக்கு ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
29 வயதுடைய நூர் ஷகிலா அப்துல்லா என்ற அந்தப் பெண், தன்னை பல் மருத்துவராக அடையாளப்படுத்திக் கொண்டு, பதிவு செய்யப்படாத பல் மருத்துவத்தைச் செய்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்த பட்சம் 3 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அப்பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளர்.

Related News