Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி
தற்போதைய செய்திகள்

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

Share:

கடந்த வாரம் மூதாட்டி ஒருவரிடம் கொள்ளையடித்ததுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக 32 ஆடவர் ஒருவர் இன்று தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

எஸ், சரண் என்ற அந்த நபர், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் தைப்பிங், லாருட் மாத்தாங், தாமான் அசாம் மாஜு என்ற இடத்தில் 75 வயது மூதாட்டிக்கு சொந்தமான ஆபரணங்களை கொள்ளையிட்டதுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக குற்றஞ்சட்டப்பட்டுள்ளார்.

2 மாத சிறைத் தண்டனையை நிறைவு செய்து விட்டு கடந்த மாதம் வீடு திரும்பியதாக கூறப்படும் அந்த ஆடவர், மறுபடியும் ஒரு மூதாட்டியிடம் கை வரிசையை காட்டியுள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மூதாட்டியிடமிருந்து 10 வெள்ளி ரொக்கம், ஒரு தங்கச் சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்ததுடன் அந்த மூதாட்டியை காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது