Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

17 வயது இளம் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

ஜன.15-

ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 17 வயது இளம் பெண் ஒருவர், ஒரு பெண்ணை பயமுறுத்தியதற்காகவும் அவரது வீட்டிலும் கார் மீதும் சிவப்பு சாயத்தை ஊற்றி சேதம் விளைவித்தற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த இளம்பெண் அக்குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் ஸ்குடாயில் உள்ள ஒரு வீட்டில் கடந்த டிசம்பர் 29 அன்று அதிகாலை 5:30 மணியளவில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எச்சரிக்கை, நல்ல நடத்தைக்கான பிணை, அபராதம், சமூக சேவை விதிக்கப்படலாம், அல்லது சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படலாம், நீதிமன்றம் சமூக நலத்துறையின் நடத்தை அறிக்கையைப் பெற்ற பிறகு, ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க ஒத்திவைத்துள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி