Jul 5, 2026
Thisaigal NewsYouTube
கராவோகே அறையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கராவோகே அறையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.04-

போலீசாரின் கண்களை மறைக்கும் வகையில் வாடகை வீட்டைக் கராவோகே மையமாக மாற்றி, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தி வந்த கும்பலை ஜோகூர் மாநில போலீசார் முறியடித்துள்ளதாக அதன் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தந்திரம் அம்பலமானதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கடத்தல் நடவடிக்கைக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் 52 வயது நபர் உட்பட 4 உள்ளூர் ஆடவர்கள், ஓர் உள்ளூர் பெண், ஒரு சிங்கப்பூர் பிரஜை, 2 வியட்நாம் பெண்கள், லாவோஸைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் இதில் கைது செய்யப்பட்டதாக டத்தோ குமார் விளக்கினார்.

இந்தக் கும்பல் பிடிபட்டது மூலம் மொத்தம் 17 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல வகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைத் தெரிவித்தார்.

Related News

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி