Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மிகப்பெரிய ஊழலாக அதனை இப்போது வகைப்படுத்த முடியாது
தற்போதைய செய்திகள்

மிகப்பெரிய ஊழலாக அதனை இப்போது வகைப்படுத்த முடியாது

Share:

புத்ராஜெயா, ஜூலை 06-

மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp. (எச்.ஆர்.டி.எப். கோர்ப்) பில், நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழலை, 1MDB க்கு நிகரான மிகப்பெரிய ஊழலாக இப்போதைக்கு வகைப்படுத்த இயலாது என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் பாமி பட்ஷ்ல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முதலாளிமார்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 377 கோடி வெள்ளியை முதலீட்டுத் திட்டத்திற்கு HRD Corp. பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

எனினும் இவ்விவகாரம் குறித்து மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் , மக்களவையில் விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சரான பாமி பட்ஷ்ல் கேட்டுக்கொண்டார்.

Related News