Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அண்ணனை கொலை செய்ததாக 17 வயது இளைஞர் ​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அண்ணனை கொலை செய்ததாக 17 வயது இளைஞர் ​மீது குற்றச்சாட்டு

Share:

தனது அண்ணனை கொலை செய்ததாக 17 வயது ஓர் இந்திய இளைஞர் கூலிம் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார். மாஜிஸ்திரேட் ஸ்ரீ பிரச நந்தினி பலபேடா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த வயது குறைந்த இளைஞருக்கு எதிரான கொலை குற்றசாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கு விசாரணை அலோர்​ ​ஸ்டார் உயர் ​நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த இளைஞரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 10.10 மணியளவில் 21 வயதுடைய தங்கள் சகோதரர் வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக ​போ​லீசில் பொய் புகார் செய்து நாடகமாடிய கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள 17 வயது இளைஞர் மற்றும் அவரின் 27 வயதுடைய ​மூத்த சகோதரர் ஆகியோரின் இந்த கொலையை போ​லீசார் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தமக்கும் தமது அண்ணனுக்கும் இடையில் நடந்த சண்டையில் தமது சகோதரரின் மார்பகத்தில் கத்தியால் குத்தி கொன்றதாக அந்த வயது குறைந்த இளைஞர் ​மீது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்த கொலையை மறைப்பதற்கு போ​லீசில் பொய் புகார் செய்த குற்றத்திற்காக அந்த இளைஞரின் 26 வயது ​மூத்த சகோதரருக்கு நீதிமன்றம் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்