Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒரு கிளாஸ் தண்ணீர் 7 ரிங்கிட்டா? அதிர்ச்சியில் பயனீட்டாளர்

Share:

கோலாலம்பூர், பிப்.26-

கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் 7 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது, பயனீட்டாளர் ஒருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொள்ளை லாபம் ஈட்டும் அந்த உணவகத்தின் போக்கில் அதிருப்தி கொண்ட அந்த பயனீட்டாளர் தனது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் சமூக வலைத்தள பக்கத்தில் இதர வலைவாசிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

தாம் வாங்கிய ஒரு கிளாஸ் தண்ணீர், 7 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டதை நிரூபிக்க அதன் ரசீதையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

எனினும் உணவை ஆர்டர் கொடுக்கும் போது, அந்த உணவகத்தில் தண்ணீருக்கு கட்டணம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டதாகவும் , ஆனால் அந்த கட்டணம் 7 ரிங்கிட் வரை எகிறும் என்று தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்த பயனீட்டாளர் தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

இருப்பினும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் 7 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் என்பதை தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு