கோலாலம்பூர், லெபோ புடுவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 85 ஆயிரம் வெள்ளியைக் களவாடியதாக நம்பப்படும் 3 காவல் துறை அதிகாரிகளின் தடுப்புக் காவல் எத்ரிவரும் வெள்ளிக் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை கூறினார்.
விசாரணையை நிறைவு செய்ய அந்தத் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அயூப் கான், காவல் துறையினரைக் காப்பாற்றும் முயற்சி ஏதும் நடக்கைவில்லை என்றும் புகார் பெறப்பட்ட உடனேயே, விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
குற்றவியல் சட்டம் 380இன் கீழ் விசாரணை நடந்து வருவதாகவும், இது போன்ற குற்றங்களில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டால், நிச்சயமாக சமரசம் செய்து கொள்ளாது என அயூப் கான் குறிப்பிட்டார்








