மத்திய அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய நிதி உதவி மற்றும் மானியம் தொடர்பான காசோலை அட்டைகளில் அரசியல் கட்சிகளின் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிறபித்துள்ள உத்தரவு, கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் இந்த உத்தரவானது அனைத்து அமைச்சர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய நிதியானது, தனி நபர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல என்பதை பிரதமர் பொருத்தமான நேரத்தில் நினைவூட்டியிருப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்தில் சீனப்பள்ளிகள் சிலவற்றுக்கு மத்திய அரசாங்கம் வழங்கிய நிதி உதவி காசோலை அட்டைகளில் டிஏபி சின்னம் பயன்படுத்தப்பட்டது குறித்து பரவலாக ஆட்சேபங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசாங்க மானியங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் கூடாது என்று பிரதமர் நினைவுறுத்தியிருந்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


