கோலாலம்பூர்,ஆகஸ்ட் 19-
மதம், இனம், ஆட்சியாளர் உட்படுத்திய 3R விவகாரம் குறித்து, பெரிகாடன் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்-னிடம், நாளை கோலாலம்பூர், SENTRAL சாலையில் உள்ள மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) அலுவலகத்தில் விளக்கம் பெறப்படும் என்ற தகவலைப் போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
நாளை காலை 11 மணிக்குமுஹ்யித்தீன் யாசின்-னிடம் போலிஸ் விளக்கம் பெறும் என்று மலேசியா போலிஸ் படை தலைவர் டான் ஸ்ரீ ரஜருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சாடி அவதூறாக முஹ்யித்தீன் பேசியது குறித்து இதுவரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 30 போலிஸ் புகார்கள் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.








