கெடா, ஜன - 10
கெடா, பாலிங் , கம்போங் சாரோக் பாக்கோங் -கில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காட்டுப்பன்றியை விழுங்கிய 5 மீட்டர் நீளமுள்ள மலைபாம்பு ஒன்று பிடிபட்டதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பத்தை Baling பொது தற்காப்பு படை மாவட்ட அதிகாரி லெஃப்டெனன் முஹமாட் ஃபைசோல் அசிஸ் தெரிவித்தார்.
நேற்று நண்பகலில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தம் குழுக்களுடன் அவ்விடத்திற்கு விரைந்ததாக Mohd Faizol கூறினார்.
25 நிமிடங்களுக்கு பிறகு 40 கிலோகிராம் எடை கொண்ட மலைபாம்பு வெற்றிகரமாக பிடிக்கபட்டதாக முஹமாட் ஃபைசோல் விவரித்தார்.








