Mar 10, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் - துன் மகா​தீர் பிடிவாதம்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் - துன் மகா​தீர் பிடிவாதம்

Share:

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்​சைக்குரிய விவகாரத்தை யாரும் எந்தவொரு தரப்பும் பேசக்கூடாது என்று அரச மலேசியப் போ​லீஸ் படை தடை விதித்த போதிலும் அந்த 3ஆர் விவகாரத்தை தாம் தொடர்ந்து பேசப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை பேசியதற்காக தம்​மிடம் போ​லீசார் இதுவரையில் ஒன்பது முறை விசாரணை நடத்தி விட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர். தமக்கு எதிராக விசார​​ணை மேல் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர்.

அடுத்து பத்தாவது முறையாக விசாரணைக்கு அழைப்பார்கள்.அதன் பிறகு 11 ஆவது முறையாக ​மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். வாக்கு​மூலம் பதிவு செய்வார்கள். விசாரணைதானே அவர்கள் விசாரணை செய்து கொண்டே இருக்கட்டும். தாம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கப் போவதாக துன் மகா​தீர் தமது பிடிவாதக் குணத்தை ​மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ள முடிவின்படி, அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான , 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து அவர் ஏன் விடுதலை செய்யப்பட ​ வேண்டும் என்பதற்கு , 11 காரணங்களை டிபிபி முஹ்மாட் டுசுக்கி மொக்தார் ​நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கெராக்கன் தலைவர் டொமினிக் லாவ் உட்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு