ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் வேளையில் லஞ்ச ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் அரசியல்வாதிகளின் பெயர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அம்பலப்படுத்த வேண்டும் என்று C4 ( சி.4) என்று அழைக்கப்படும் லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடி வரும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்பிஆர்எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு ஊழல்வாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டு, எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை அம்பலப்படுத்துவது அந்த ஆணையத்தின் தார்மீக கடப்பாடாகும் என்று C4 அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி புஷ்பன் முருகையா கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் குற்றம் இழைத்து இருப்பதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்குமானால் அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவதில் எஸ்பிஆர்எம்மிற்கு பிரச்சனை இருக்காது என்று தாங்கள் நம்புவதாக புஷ்பன் முருகையா குறிப்பிட்டுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


