ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் வேளையில் லஞ்ச ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் அரசியல்வாதிகளின் பெயர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அம்பலப்படுத்த வேண்டும் என்று C4 ( சி.4) என்று அழைக்கப்படும் லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடி வரும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்பிஆர்எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு ஊழல்வாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டு, எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை அம்பலப்படுத்துவது அந்த ஆணையத்தின் தார்மீக கடப்பாடாகும் என்று C4 அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி புஷ்பன் முருகையா கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் குற்றம் இழைத்து இருப்பதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்குமானால் அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவதில் எஸ்பிஆர்எம்மிற்கு பிரச்சனை இருக்காது என்று தாங்கள் நம்புவதாக புஷ்பன் முருகையா குறிப்பிட்டுள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


