டிச. 29-
பகாங்கின் குவாந்தான், Kuantan, Pekan, Rompin, Jerantut, Maran ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று முதல் திங்கள் வரை தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தேசிய வெள்ள முன்னறிவிப்பு எச்சரிக்கை மையம் PRABN தெரிவித்துள்ளது.
சுங்கை பகாங், சுங்கை குவாந்தான், சுங்கை ரோம்பின் ஆகிய முக்கிய நதிகளில் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக Sungai Lepar, Sungai Penor, Sungai Rangin, Sungai Tiram , Sungai Kenau போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
Pekan, Rompin, Jerantut, Maran ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு துணை நதிகளிலும் நீர் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெள்ளம் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். JPS தொடர்ந்து நீர் மட்டத்தை கண்காணித்து எச்சரிக்கை அறிவிப்புகளை புதுப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








