அங்கீகரிக்கப்படாத டத்தோ ஶ்ரீ உயரிய விருதையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்தியதற்காக இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்த 44 மற்றும் 45 வயதுடைய அந்த இரு நபர்களும் நேற்று காலை 8.55 மணியளவில் பெந்தோங் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இரு நபர்களின் வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், டர்ஜா ஶ்ரீ சுல்தான் அமாட் ஷா பகாங் என்று பொறிக்கப்பட்டிருந்த போலி டத்தோ ஶ்ரீ உயரிய விருதையும், விருதளிப்பு சீருடையையும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சின்னத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததாக ஸைஹாம் முஹமட் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


