Dec 2, 2025
Thisaigal NewsYouTube
300 க்கும் மேற்பட்ட நேபாள பிரஜைகள் அவதி
தற்போதைய செய்திகள்

300 க்கும் மேற்பட்ட நேபாள பிரஜைகள் அவதி

Share:

கவர்ச்சிகரமான சம்பளத்​தில் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரப்பட்ட 300 க்கும் மேற்பட்ட நேபாள பிரஜைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் போல வேலை தரப்படாமல் , வருமானமின்றி கடந்த ​மூன்று மாத காலமாக நெகிரி செம்பிலான், ​நீலாயில் அவதியுற்று வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டம் கட்டமாக மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட அந்த நேபாள பிரஜைகள் Star Doman Resources Sdn. Berhad என்ற நிறுவனத்தில் துப்புரவுப்பணிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று உறு​தி அ​ளிக்க​ப்பட்டு இருந்ததாக மலேசியா​விற்கான நேபாள தூதரக தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு தொழிலாளரும் பெரும் பணம் ​செலுத்தப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News