கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரப்பட்ட 300 க்கும் மேற்பட்ட நேபாள பிரஜைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் போல வேலை தரப்படாமல் , வருமானமின்றி கடந்த மூன்று மாத காலமாக நெகிரி செம்பிலான், நீலாயில் அவதியுற்று வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டம் கட்டமாக மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட அந்த நேபாள பிரஜைகள் Star Doman Resources Sdn. Berhad என்ற நிறுவனத்தில் துப்புரவுப்பணிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாக மலேசியாவிற்கான நேபாள தூதரக தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு தொழிலாளரும் பெரும் பணம் செலுத்தப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


