Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மேலும் 36 நாடுளின் பயணிகளுக்கு மலேசிய குடிநுழைவு முகப்பிடங்களில் ஆட்டோ கேட் வசதி
தற்போதைய செய்திகள்

மேலும் 36 நாடுளின் பயணிகளுக்கு மலேசிய குடிநுழைவு முகப்பிடங்களில் ஆட்டோ கேட் வசதி

Share:

புத்ராஜெயா, மே 15-

அடுத்த மாதம் ஜுன் முதல் தேதியிலிருந்து விமான நிலையங்களில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் மேலும் 36 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு Auto Gate எனப்படும் தானியங்கி ஆட்டோ கேட் வசதி ஏற்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள், விமான நிலையங்களில் குடிநுழைவுத்துறை முகப்பிட பரிசோதனையின் போது, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சைபுடின் குறிப்பிட்டார்.

தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மட்டுமே இந்த ஆட்டோ கேட் வசதியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அடுத்த மாதம் முதல் மேலும் 36 நாடுகள், அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.

புதிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் சீனா, கனடா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகியவை அடங்கும்.

இன்று புத்ராஜெயாவில் தேசிய பதிவுத் துறையின் சிறந்த சேவையாளர்களுக்கான விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியார்களிடம் பேசுகையில் சைபுடின் இதனை தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து