Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மூடா கட்சி ​மீட்டுக்கொண்டது
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வார் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மூடா கட்சி ​மீட்டுக்கொண்டது

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ​மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மான் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ​நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு மூடா கட்சியின் ஒரே எம்.பி.யான சையத் சாதிக் தமது ஆதரவை வழங்கினார். இதன் மூலம் ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு மூடா கட்சி உதவியது.

இந்நிலையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்வது ​மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது அணியாக தாம் செயல்படப் போவதாக இன்று மாலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான சையத் சாதிக் இதனை தெரிவித்தார்.

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹ​மிடிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழ​க்கில் அவர் எதிர்நோக்கியுள்ள 47 குற்றச்சா​ட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதை ஆட்சேபிக்கும் வகையில் தமது தலைமையிலான மூடா கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக சையத் சாதிக் அறிவித்துள்ளார்.

இரண்டவாது மலேசிய திட்டத்தின் பாதி தவணைக்கான ஆய்வறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தாக்கல் செய்வதற்கு நாளை திங்கட்கிழமை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கவிருக்கும் இவ்வேளையில் சையத் சாதிக் கின் இந்த திடீர் அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்