அலோர் ஸ்தார்,ஜன.22
கெடா, பூலாவ் பாயார் கடலோரப்பகுதியில் நீச்சல் பயிற்சியின் போது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சிலாங்கூரை சேர்ந்த 43 வயதுடைய அப்பெண் நேற்று மதியம் 2 மணியளவில் சுயநினைவின்றி காணப்பட்டதுடன் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக கோத்தா செத்தார் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி அஹ்மாட் ஷுக்ரி மாட் ஆகிர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் பூலாவ் பாயார் கடற்பகுதியில் உள்ளூர் உரிமம் பெற்ற நிறுவனத்துடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்ததாக அஹ்மாட் ஷுக்ரி கூறினார்.
இது திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அஹ்மாட் ஷுக்ரி இன்று அறிவித்தார்.








