வேலைக்குச் சென்ற தனது கணவர் கடந்த இரண்டு நாட்களாக வீடு திரும்பாதது குறித்து, குடும்ப மாது ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
37 வயதுடைய தமது கணவர் செ.ஜெகன் காணாதது குறித்து, டெங்கில், தாமான் டத்தோ எம்.எஸ்.மணியம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த எஸ்.லோகேஸ்வரி சிப்பாங், டெங்கில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கடந்த மே 6 ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு, வீட்டிலிருந்து புறப்பட்டு, புத்ராஜெயா, பிரேசின்ட் 19 பகுதியில் உள்ள சிமெட் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற பின்னர், அவர் வீடு திரும்பவில்லை என்று லோகேஸ்வரி தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொழிற்சாலையில் விசாரித்த போது, தமது கணவர் அன்றைய தினம் வேலை முடிந்து மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று லோகேஸ்வரி தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


