Jan 21, 2026
Thisaigal NewsYouTube
மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Share:

ஷா ஆலாம், ஜனவரி.21-

தவறான முறையில் செய்யப்பட்ட மார்பக அழகு சிகிச்சை காரணமாகப் பாதிக்கப்பட்ட 33 வயது சிகையலங்கார நிபுணருக்கு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீடு வழங்க ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஷாஹிரா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், 2019-ஆம் ஆண்டு டாமன்சாரா பெர்டானாவில் உள்ள ஓர் அழகு நிலைய உரிமையாளர் மீது சிவில் வழக்குத் தொடர்ந்தார். 2,000 வெள்ளி செலவில் மார்பகப் பெருக்கத்திற்காகச் செய்யப்பட்ட 'பில்லர்' ஊசி சிகிச்சை அவருக்குத் தோல்வியில் முடிந்தது.

சிகிச்சை முடிந்த உடனேயே அவருக்குக் கடும் வலி ஏற்பட்டுள்ளது. சில நாட்களிலேயே தொற்று மற்றும் உடல்நலச் சிக்கல்கள் காரணமாக அவர் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக அவர் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

கடமை தவறியது மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டது தொடர்பான இந்த வழக்கில், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை அந்தப் பெண்ணுக்கு இன்று சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related News

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை