Mar 24, 2026
Thisaigal NewsYouTube
காவல் நிலையம் மூடப்படாது, நுழைவாசல் மட்டுமே மூடப்படும்.- உள்துறை அமைச்சர் விளக்கம்.
தற்போதைய செய்திகள்

காவல் நிலையம் மூடப்படாது, நுழைவாசல் மட்டுமே மூடப்படும்.- உள்துறை அமைச்சர் விளக்கம்.

Share:

மராங், ஜூலை 10-

காவல் நிலையங்களின் நுழைவாசல் இரவு 10.00 மணிக்கு மேல் மூடப்படும் என மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறிய கூற்றை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு அதன் தொடர்பான விளக்கத்தை அமைச்சர் இன்று அளித்துள்ளார்.

தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு காவல் நிலையங்களின் நுழைவாசல் மட்டுமே அடைக்கப்படும் என்றும் மற்றப்படி காவல் நிலையங்கள் வழக்கம் போல 24 மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் என அமைச்சர் விளக்கம் கூறினார்.

மிக பிரச்சனைகளுக்குரிய இடஙக்ளில் உள்ள காவல் நிலையங்களின் நுழைவாசல்கள் இரவு 10.00 மணிக்குமேல் மூடப்படும் என்ரும் இது ஒன்றும் புதிதான விசயம் அல்ல என அமைச்சர் கூறியதுடன், இது மலேசிய தேசிய காவல் படை தலைவர் முன்பு அறிவித்திருந்த கட்டளையும் கூட என சைபுடின் தெளிவுப் படுத்தினார்.

Related News

காவல் நிலையம் மூடப்படாது, நுழைவாசல் மட்டுமே மூடப்படும்.- ... | Thisaigal News