பொதுப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தும் முயற்சியில் மாற்றுப் போக்குவரத்துச் சேவையாக கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘on-demand’ எனப்படும் வேன் சேவையைப் போக்குவரத்து அமைச்சு அறிமுக செய்ய உள்ளது.
இது குறித்து பேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், பொதுப் பேருந்து சேவைகள் பகுதிகளில் இந்த வேன் சேவைகளை இலக்காகக் கொண்ட முன் முயற்சியை செயல்படுத்துவது பற்றிய விரிவானத் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
2024 வரவு செலவுத் திட்ட அறிக்கையில், பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் ஒரு பகுதி வேன்களை வாங்கப் பயன்படுத்தப்படும் என்றும், அவற்றின் செயல்பாடுகளை Prasarana Malaysia Berhad (Prasarana). மேற்பார்வையிடும் என்றும் அவர் கூறினார்.
e-hailing சேவையைப் போலவே இந்த வேன்களும் செயல்படும். ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் இவை பயணிக்காது. இருந்தாலும், எல்லோராலும் மிக எளிதாகக் பயன்படுத்தக் கூடிய இடத்தில் அவை நிறுத்த் வைக்கப்படும் என்றார் அந்தோணி லோக்.








