Feb 3, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் விபத்து: கழிவு நீர் குழிக்குள் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து: கழிவு நீர் குழிக்குள் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

தம்பின், பிப்ரவரி.03-

தம்பின் அருகே தனது சகோதரருடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த 14 வயது சிறுவன், 10 மீட்டர் ஆழமுள்ள திறந்த கழிவுநீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்தார்.

நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 10.10 மணியளவில், உயிரிழந்த சிறுவனும் அவரது 17 வயது சகோதரரும், இரவு உணவிற்குப் பிறகு, கோலா ஈனாவில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அமிருடின் சரிமான் தெரிவித்துள்ளார்.

மூத்த சகோதரன் வளைவு ஒன்றில் திரும்பும் போது, அவரது இரு சக்கர வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து, கட்டுமானப் பணியில் இருந்த கழிவுநீர் குழிக்குள் மோதியதாக நம்பப்படுகிறது.

சற்று நேரத்திலேயே சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பாதிக்கப்பட்ட சிறுவனை குழியிலிருந்து வெளியே மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினர்.

இருப்பினும், அவர் இரவு 11.30 மணியளவில் அச்சிறுவன் உயிரிழந்தார்.

Related News

கோலாலம்பூர் மேயர் தேர்தலை வைத்து சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம் - அந்தோணி லோக் வலியுறுத்து

கோலாலம்பூர் மேயர் தேர்தலை வைத்து சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம் - அந்தோணி லோக் வலியுறுத்து

மாமன்னரைச் சந்தித்த பிரதமர் துறை அமைச்சர் ஸுல்கிஃப்லி: சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்

மாமன்னரைச் சந்தித்த பிரதமர் துறை அமைச்சர் ஸுல்கிஃப்லி: சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்

யாயாசான் அகால்பூடி ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி ஸாஹிட் மனுத் தாக்கல்: வழக்கானது பிப்வரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

யாயாசான் அகால்பூடி ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி ஸாஹிட் மனுத் தாக்கல்: வழக்கானது பிப்வரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

அலோர் காஜாவில் 6 வயது சிறுவன் வெந்நீர் ஊற்றுக் குளத்தில் மூழ்கி பலி

அலோர் காஜாவில் 6 வயது சிறுவன் வெந்நீர் ஊற்றுக் குளத்தில் மூழ்கி பலி

கோலாலம்பூரில் 'Sojul Gang' எனப்படும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூரில் 'Sojul Gang' எனப்படும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் கும்பல் முறியடிப்பு

அரச  மன்னிப்பு என்பது 'பரிசு' அல்ல; அது ஒரு அரசியலமைப்பு நடைமுறை - பகாங் சுல்தான் விளக்கம்

அரச மன்னிப்பு என்பது 'பரிசு' அல்ல; அது ஒரு அரசியலமைப்பு நடைமுறை - பகாங் சுல்தான் விளக்கம்