Jul 9, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக் காவல்களில் கைதிகளை நிர்வாணமாக்கும் நடைமுறை இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் விளக்கம்
தற்போதைய செய்திகள்

தடுப்புக் காவல்களில் கைதிகளை நிர்வாணமாக்கும் நடைமுறை இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் விளக்கம்

Share:

தடுப்புக் காவல்களில் கைதிகளை நிர்வாணமாக்கும் நடைமுறையை போலீசார் பின்பற்றவில்லை என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் சே முகமது சுல்கிஃப்லி ஜூசோ எழுப்பிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த அவர், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து அமலாக்க அமைப்புகளும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 20A-ஐ கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தச் சட்டத்தின் நான்காவது அட்டவணையில் கைது செய்யும் முறை, உடல் சோதனை நடத்தும் நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் சைஃபுடின் விளக்கமளித்துள்ளார்.

அண்மையில், சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி, கைது செய்யப்பட்டவர்களை போலீசார் தொடர்ந்து நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சைஃபுடின் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Related News

கிளந்தான் ஹிப்பி பார்ட்டி சர்ச்சை: அனுமதியின்றி நடத்திய ஏற்பாட்டாளருக்கு 25 ஆயிரம் அபராதம்

கிளந்தான் ஹிப்பி பார்ட்டி சர்ச்சை: அனுமதியின்றி நடத்திய ஏற்பாட்டாளருக்கு 25 ஆயிரம் அபராதம்

சீனப் பிரதிநிதிகளுடன் மலேசியா வந்தாரா ஜோ லோ? / நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் விளக்கம்

சீனப் பிரதிநிதிகளுடன் மலேசியா வந்தாரா ஜோ லோ? / நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் விளக்கம்

சாலை விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவுவதற்காகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைப் புறக்கணித்து, களத்தில் நின்று உதவியுள்ளார் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன்.

சாலை விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவுவதற்காகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைப் புறக்கணித்து, களத்தில் நின்று உதவியுள்ளார் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன்.

96 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆறாம் படிவ மாணவர்களுக்கு 14.4 மில்லியன் ரிங்கிட் உதவித்தொகை ஒதுக்கீடு

96 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆறாம் படிவ மாணவர்களுக்கு 14.4 மில்லியன் ரிங்கிட் உதவித்தொகை ஒதுக்கீடு

ஈப்போவில் மேலாளர் எண்ணிலிருந்து வந்த போலி உத்தரவு - சுமார் 10 லட்சம் ரிங்கிட்டை இழந்த நிறுவனம்

ஈப்போவில் மேலாளர் எண்ணிலிருந்து வந்த போலி உத்தரவு - சுமார் 10 லட்சம் ரிங்கிட்டை இழந்த நிறுவனம்

பள்ளி மாணவரை முதலை தாக்கிய சம்பவம்: சரவாக்கில் முதலைகளைப் பிடிக்கும் சிறப்பு நடவடிக்கை

பள்ளி மாணவரை முதலை தாக்கிய சம்பவம்: சரவாக்கில் முதலைகளைப் பிடிக்கும் சிறப்பு நடவடிக்கை