Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவரை முதலை தாக்கிய சம்பவம்: சரவாக்கில் முதலைகளைப் பிடிக்கும் சிறப்பு நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவரை முதலை தாக்கிய சம்பவம்: சரவாக்கில் முதலைகளைப் பிடிக்கும் சிறப்பு நடவடிக்கை

Share:

சரவாக் மாநிலம் பிந்துலுவிலுள்ள சுங்கை தாதாவ் ஆற்றில், தொடக்கப் பள்ளி மாணவர் ஒருவர் முதலைத் தாக்குதலுக்கு உள்ளானது உள்ளிட்ட தொடர் சம்பவங்களால் அங்கு முதலைகளை பிடிக்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முதல் நாளிலேயே, சுமார் 5 மீட்டர் நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று பிடிபட்டது.

சுங்கை தாதாவ் மற்றும் தாதாவ் எஸ்டுவரி பகுதிகளில் பெரிய முதலைகள் அடிக்கடி காணப்படுவதாலும், கடந்த காலங்களில் பல தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாலும் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முதலை வேட்டை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சரவாக் வனத்துறை கழகத்தின் பிந்துலு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் படி, மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள முதலைகளை பிடிக்க, பிந்துலு, சிபு மற்றும் தாதாவ் பகுதிகளைச் சேர்ந்த உரிமம் பெற்ற அனுபவமிக்க முதலை வேட்டையாடுபவர்கள் இந்த சிறப்பு நடவடிக்கையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்