Mar 19, 2026
Thisaigal NewsYouTube
47-வது ஆசியான் உச்சி மாநாடு: 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ராஜ விருந்து!
தற்போதைய செய்திகள்

47-வது ஆசியான் உச்சி மாநாடு: 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ராஜ விருந்து!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நாளை துவங்கவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில், விருந்து உபசரிப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், 24 மணி நேரமும் உழைத்து, 5,000 பிரதிநிதிகளுக்காக உணவு தயாரிக்கின்றனர்.

அடுத்த மூன்று நாட்களுக்கு தினமும் ஐந்து முறை உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள அவர்கள், மலேசிய உணவுகளின் சுவையையும், தரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உணவுப் பட்டியலை வடிவமைத்துள்ளனர்.

மலேசியாவின் பல்சுவை சமையல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரெண்டாங், வறுவல், சார் கொய் தியாவ் மற்றும் சாத்தே போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன என்று சமையல் குழுத் தலைவர் ஹிஷாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விருந்து உபசரிப்பில், The King of Fruits என்றழைக்கப்படும் சுரியானும் பரிமாறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், உள்ளூர் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானங்கள் மற்றும் பாரம்பரிய தேயிலைக் கொண்டு தயாரிக்கப்படும், "தே தாரிக்" பிரதான சிறப்பாக இருக்கும் என்றும் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை