Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புற்று நோயால் போராடி வரும் மாணவன் சஞ்ஜீவ்விற்கு கை கொடுங்கள்

Share:

கெடா, ஜன. 20-

கெடா ஜித்தாராவிலுள்ள 10 வயது தனது மகன் சஞ்ஜீவ் த/பெ தனபாலசிங்கம் " BURKITT LYMPHOMA" எனும் புற்று நோயால் 4வது கட்டம் நிலையில் போராடி வரும் நிலையில் அவருக்கு கை கொடுப்பத்தற்கு மக்களின் ஆதரவை நாடுக்கிறார் அவரின் தாயார் கவிதா கணேசன் .

ஆரம்ப காலத்தில் மகன் சஞ்ஜீவுக்கு வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். பெற்றோர்களாகிய நாங்கள் அது சாதாரணமான வலி என்று நினைத்தோம் . மகனின் அந்த வலிக்கு ஜித்ரா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தோம்.

ஆனால், இப்பொழுதுத்தான் தெரிகிறது அது புற்று நோய் என்று மனம் உடைந்த நிலையில் கவிதா கூறினார் .

ஜித்ரா துன் ஜாங்கிலுள்ள சீன ஆரம்பள்ளியில் பயின்று வந்த சஞ்ஜீவ் விளையாட்டுத்துறையில் மிகவும் சிறப்பாக விளங்கினார் .இதுவரை " Bola Keranjang " போட்டியில் கலந்து கொண்டு பள்ளிக்காக பல பதக்கங்களை பெற்று குவித்துள்ளார். இந்நோய் கண்டு இருப்பதாக அறிந்தப் பின் இப்பொழுது நான்கு மாதங்களாக என் மகன் வீட்டில் முடங்கிய நிலையில் உள்ளதார் என்று கவிதா கூறினார்.

தன் கணவர் தனபாலசிங்கம் லோரி ஓட்டுனர் ஆவார் . அவரின் மாத சம்பளத்தில்தான் ஐந்து குழந்தைகளையும் சஞ்ஜீவ் மருத்துவ செலவுகளை கவனித்து வருகிறோம்.

சஞ்ஜீவ் புற்று நோய்க்கான கிமோ மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் பினாங்கு பொதுமருத்துவமனையில்செய்து வருவதால் அவரின் உடல் மெலிந்து விட்டன. அத்துடன் தலை முடிகளும் உதிர்ந்து விட்டன.

அவரின் உடலுக்கு அதிக சத்துகள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அவருக்கு பிரத்தியேக பால் வழங்க வேண்டும்.இப்பாலின் விலை சற்று அதிகம் என்பத்தால் மக்கள் முடிந்தால் அதனை வழங்கி தன் மகனுக்கு கைக்கொடுக்கும் படி கவிதா பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.

இன்று மலேசிய புற்றுநோய் காப்பாளர் இயக்கத்தின் தலைவர் Zurainai Kamal , மாணவன் சஞ்ஜீவ்வை சந்தித்து கணிசமான நிதி உதவியை வழங்கினார் . இம்மாணவனுக்கு கைகொடுக்கும் நினைக்கும் பொதுமக்கள் 6451298201 Public Bank என்ற வங்கி கணக்கு வாயிலாக நிதி உதவியை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்தி - படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி