நான்கு நாட்களுக்கு முன்பு தமது தந்தையை கொலையை செய்ததாக இந்திய ஆடவர் ஒருவர் போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஒரு லோரி ஓட்டுநரான 26 வயது பி. நிருபன் என்று அந்த ஆடவர், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் வி. வனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை 1.10 மணியளவில் நெகிரி செம்பிலான்,லுக்குட், தாமான் டி அம்பாங் கோத்தா என்ற இடத்தில் உள்ள தங்கள் வீட்டில் 49 வயது தமது தந்தை கே. பரமசிவத்தை அடித்துக்கொன்றதாக லோரி ஓட்டுநரான நிருபன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனைக்கு பதிலாாக கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நிருபன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை, சிரம்பான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் இன்றைய வழக்கு விசாரணையில் அந்த ஆடவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் தமது தந்தை பரமசிவம், வீட்டில் ரகளைப் புரிந்ததைத் தொடர்ந்து அவரை நிருபன் தாக்கியதில் அந்த பெரியவர் வீட்டிலேயே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


