Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தந்தையை கொலை செய்ததாக ம​கன் ​​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தந்தையை கொலை செய்ததாக ம​கன் ​​மீது குற்றச்சாட்டு

Share:

நான்கு நாட்களுக்கு முன்பு தமது தந்தையை கொலையை செய்ததாக இந்திய ஆடவர் ஒருவர் போர்ட்டிக்சன் மாஜி​ஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஒரு லோரி ஓட்டுநரான 26 வயது பி. நிருபன் என்று அந்த ஆடவர், குற்றவியல் சட்டம் 302 பிரி​​வின் ​கீழ் மாஜிஸ்தி​ரேட் வி. வனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை 1.10 மணியளவில் நெகிரி செம்பிலான்,லுக்குட், தாமான் டி அம்பாங் கோத்தா என்ற இடத்தில் உள்ள தங்கள் வீட்டில் 49 வயது தமது தந்தை கே. பரமசிவத்தை அடித்துக்கொன்றதாக லோரி ஓட்டுநரான நிருபன் குற்றஞ்சாட்டப்பட்டா​ர்.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனைக்கு பதிலாாக கூடிய ப​ட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் ​கீழ் நிருபன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கு விசாரணை, சிரம்பான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் இன்றைய வழக்கு விசாரணையில் அந்த ஆடவரிடமிருந்து எந்தவொரு வாக்கு​மூலமும் பதிவு ​செய்யப்படவில்லை. சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் தம​து தந்தை பரமசிவம், வீட்டில் ரகளைப் புரிந்ததைத் தொடர்ந்து அவரை நிருபன் தாக்கிய​தில் அந்த ​பெரியவர் வீட்டிலேயே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!