Feb 11, 2026
Thisaigal NewsYouTube
போர்ட்டிக்சனில் கொலை: மியான்மார் இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

போர்ட்டிக்சனில் கொலை: மியான்மார் இளைஞர் கைது

Share:

போர்ட்டிக்சன், பிப்ரவரி.11-

போர்ட்டிக்சனில், சக நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 21 வயது மியன்மார் இளைஞரைப் போலீஸ் துறை கைது செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து, திங்கட்கிழமை இரவு போலீஸ் துறைக்குத் தகவல் கிடைத்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.

மஸ்லான் உடின் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, "பாதிக்கப்பட்ட நபர் கழுத்து மற்றும் உடலில் இதர பகுதிகளில் 29 கத்திக் குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்."

ஒரே நாட்டைச் சேர்ந்த அந்த நபர் மற்றும் சந்தேக நபர் இருவரும் அந்த அறையில் மது அருந்திக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இருப்பினும், இந்த கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து இன்னும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரும் இறைச்சியைத் தணலில் வாட்டி எடுக்கும் தொழிலைச் செய்து வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஸ்கூடாய் தீ விபத்து: கர்ப்பிணி உட்பட இருவர் பலி - கணவர் உட்பட ஐவரிடம் விசாரணை

ஸ்கூடாய் தீ விபத்து: கர்ப்பிணி உட்பட இருவர் பலி - கணவர் உட்பட ஐவரிடம் விசாரணை

போலீஸ் துறையின் தோல்விகளைக் கண்டித்து புக்கிட் அமானில் அரசு சாரா இயக்கம் மகஜர்

போலீஸ் துறையின் தோல்விகளைக் கண்டித்து புக்கிட் அமானில் அரசு சாரா இயக்கம் மகஜர்

வரலாற்றுப் பாடத் திட்டம் அரசியல் சார்பின்றி இருக்கும்: துணையமைச்சர் உறுதி

வரலாற்றுப் பாடத் திட்டம் அரசியல் சார்பின்றி இருக்கும்: துணையமைச்சர் உறுதி

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்: பிரதமர் அன்வார் உறுதி

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்: பிரதமர் அன்வார் உறுதி

கூலிம் நகரைத் தூய்மைப்படுத்த ‘காகங்களைச் சுடும்’  நடவடிக்கை: நகராண்மைக் கழகம்

கூலிம் நகரைத் தூய்மைப்படுத்த ‘காகங்களைச் சுடும்’ நடவடிக்கை: நகராண்மைக் கழகம்

வணிக உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: சிலாங்கூர் ஊராட்சி மன்ற அதிகாரிகள் 7 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

வணிக உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: சிலாங்கூர் ஊராட்சி மன்ற அதிகாரிகள் 7 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது