கோல சிலாங்கூர், பிப்.3
கோலசிலாங்கூர், ஜெரம் பகுதியில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை ஓர் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த சிறுமியின் தாயார், இரவு 8.29 மணியளவில் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹசாஹருரின் தஜுடின் தெரிவித்தார்.
சிறுமியின் தாயாரை கடந்த 2022 ஆம் ஆண்டு விவகாரத்து செய்து விட்ட அந்த 33 வயதுடைய அந்த நபர், பின்னர் 8 வயதுடைய அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடைய மற்றொரு சம்பவத்தில் 14 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் அவரின் 66 வயது தாத்தா மற்றம் 21 வயது மாமனுக்கு எதிராக புகார் செய்யப்பட்டு இருப்பதையும் சுப்ரிண்டெண்டன் ஹசாஹருரின் தெரிவித்தார்.







