Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங்கில் ஆடவர் கடத்தல் சம்பவம், மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

பூச்சோங்கில் ஆடவர் கடத்தல் சம்பவம், மேலும் இருவர் கைது

Share:

பூச்சோங், ஜூலை.25-

பூச்சோங், புக்கிட் பூச்சோங்கில் ஆடவர் ஒருவர் லோரியில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்துள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய அந்த இரண்டு நபர்கள், நேற்று வியாழக்கிழமை பூச்சோங்கிலும், உலு சிலாங்கூரிலும் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த இரு நபர்களும் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் தொடர்பில் போலீசார் இதுவரை மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை சுபாங் ஜெயா, SS19 இல் முதலாவது நபர் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரைப் போலீசார் சிறப்பு நடவடிக்கையின் வாயிலாக மீட்கப்பட்டதாக ஏசிபி வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது