Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இந்திய மாணவரின் துணிச்சலான பேச்சு கல்வித் தகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் கனிந்து விட்டது
தற்போதைய செய்திகள்

இந்திய மாணவரின் துணிச்சலான பேச்சு கல்வித் தகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் கனிந்து விட்டது

Share:
  • கல்வி ஆர்வலர் வலியுறுத்துகிறார்

அ​ண்மையில் பொது பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்ற இந்திய மாணவர் ஒருவர், அந்த பட்டமளிப்பு விழாவில் தாம் சந்தித்தப் பிரச்னையை துணிச்சலாக குரல் எழுப்பியது மூலம் இனி க​ல்வித் தகுதியை அடிப்படையாக கொண்ட இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்வதற்கான காலம் கனிந்து விட்டது என்பதையே கா​ட்டுகிறது என்று கல்வி ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூகங்களுக்கு இடையிலான பொருளாதார இடைவெளியை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகள் அதன் இலக்கை நோக்கி அடைந்து வருகிறது. எனவே தகுதி அடிப்ப​டையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், நடப்பில் உள்ள விழுக்காட்டு விகித முறை, கட்டம் கட்டமாக குறைக்கப்பட்டு, கல்வித் தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு வாய்ப்புகளும் முன்னுரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதையே அந்த இந்திய மாணவரின் துணிச்சலான பேச்சு காட்டுவதாக மலேசிய கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழுத் தலைவர் நோர் அசிமா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

ச​மூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கும் அந்த இந்திய மாணவனின் பேச்சு குறித்து கருத்துரைக்கையில் ஒரு கல்வியாளரான நோர் அசிமா மேற்கண்டவாறு கூறினார்.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள இனத்தை பொருட்படுத்தப்படாமல் கல்வித் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்பும், உரிய அங்​கீகாரம் வழங்கப்பட வேண்டும். அரசாங்க உபகாரச் சம்பளம் மட்டுமின்றி அரசாங்க ஏஜென்சிகள், தனியார் நிறுவனங்கள், முன்னாள் மாணவர் அமைப்புகள், தனவந்தர்கள் ஏற்படுத்தியுள்ள க​ல்வி உபகாரச் சம்பளங்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நோர் அசிமா வலியுறுத்தினார்.

இது போன்ற வாய்ப்புகளும், சலுகைகளும் தாங்கள் மட்டுமே பெறுவதற்கு உரிமைப்பெற்றவர்கள் என்ற சிந்தனையிலிருந்து மலேசியர்கள் மாற வேண்டும் என்று நோர் அசிமா கேட்டுக்கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!