மலேசியாவில் கருக்கலைப்பின் சட்டநிலை குறித்து மக்களிடம் தெளிவான விளக்கம் அளிக்குமாறு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் லிம் ஹுய் யிங்-ஐ இரண்டு அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து ரிப்ராக்டிவ் ரைட்ஸ் அட்வகேசி அலையன்ஸ் மலேசியா மற்றும் வுமன்ஸ் எய்ட் ஆர்கனைசேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் கருக்கலைப்பும், அதற்கான சேவைகளை வழங்கும் கிளினிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் லிம் ஹுய் யிங் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது மற்றும் சட்ட ரீதியாக தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், தவறான தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டறிக்கைக்கு எஸ்.ஐ.எஸ் ஃபாரம் மற்றும் பேமிலி பிரண்டியர்ஸ் உள்ளிட்ட மேலும் ஒன்பது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








