Apr 26, 2026
Thisaigal NewsYouTube
மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரைத் தேடும் காவற்படையினர்
தற்போதைய செய்திகள்

மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரைத் தேடும் காவற்படையினர்

Share:

டுங்குன், ஏப்ரல்.26-

திரங்கானு, டுங்குன் பகுதியில் உள்ள யுஐடிஎம் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு, மாணவி ஒருவருக்கு முன்னால் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நேற்று நண்பகல் 12:30 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவியிடமிருந்து புகார் பெறப்பட்டதாகவும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டதாகவும் டுங்குன் காவற்படை இடைக்காலத் தலைவர் Deputi Superintendan Jumaidy Bah Chong Weh தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான 12 வினாடி காணொலி சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நபர் மேலும் பல இடங்களில் இத்தகைய பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகப் பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.

Related News