Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நான்கு வாகங்களை உட்படுத்திய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்

Share:

ஜன.15-

PLUS வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த நான்கு வாகங்களை உட்படுத்திய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். மண்ணையும் பூக்களையும் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புக் கம்பியை மோதி விபத்துக்குள்ளானது. பின்புறத்தில் வந்த இரண்டு கார்கள் லாரியை தவிர்க்க முடியாமல் மோதியதால் இந்த விபத்து மேலும் அதிகரித்தது. லாரி ஓட்டுநரும் அவர் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒரு கார் பயணி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற கார் பயணிகள் படுகாயமடைந்தாக Rembau மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Shaik Abd Kadar Shaik Mohamed தெரிவித்தார்.

இந்த விபத்து அதிகாலை 5.50 மணியளவில் 226.5 வது கிலோ மீட்டரில் வடக்கு திசையை நோக்கிய பாதியில் நிகழ்ந்துள்ளது. காவல் துறையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்