May 6, 2026
Thisaigal NewsYouTube
சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

Share:

சபா பெர்ணம், டிசம்பர்.04-

சிலாங்கூர், சபா பெர்ணத்தில் நேற்று மாலையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் நான்கு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாணையில் அந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் அஹ்மாட் தெரிவித்தார்.

சபா பெர்ணம், பெக்கான் சுங்கை பெசார், ஜாலான் எஸ்பிபிசியில் நிகழ்ந்த இக்கைகலப்பு தொடர்பில் போலீசார் புகார் ஒன்றையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்