சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியேற்பு சடங்கு, வரும் சனிக்கிழமை காலையில் நடைபெறவிருக்கிறது. மந்திரி பெசார் பதவியேற்பு சடங்கிற்கு பின்னர் அன்றைய பிற்பகலில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் மற்றும் பதவியேற்பு சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பதவியேற்பு சடங்கு திங்கட்கிழமை மாற்றப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் மருத்துவ சிகிச்சைப்பெற்றப் பின்னர் நேற்று காலையில் நாடு திரும்பிய மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா விற்கு சற்று ஓய்வு தேவைப்படுவதாக அரண்மனை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


