கோலாலம்பூர், பிப்ரவரி.12-
முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவரின் அமைச்சில் சுமார் 1.11 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் புகாரைப் பெற்றுள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து எஸ்பிஆர்எம்மின் செயல்பாட்டுப் பிரிவு துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெறப்பட்ட முழுமையான புகாரையும் எஸ்பிஆர்எம் ஆய்வு செய்யும் என்றார்.
குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் ஊழல், முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகம் ஆகிய கூறுகள் இதில் உள்ளனவா என்பது கண்டறியப்படும்.
முதற்கட்டமாக, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றுகளைச் சரிபார்த்த பின்னரே அடுத்தக் கட்ட விசாரணை நடத்தப்படும். நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இந்தச் செயல்முறை அமையும் என அஹ்மாட் குசைரி உறுதியளித்தார்.








