டோல் சாவடியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காரை எட்டி உதைக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஜாங் பகுதியில் உள்ள டோல் சாவடியில் கார் ஒன்று கட்டணம் செலுத்த நின்றிருந்தபோது, அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திடீரென காரை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
கார் அங்கிருந்து புறப்பட்ட பின்னரும் அந்த நபர் காரைத் தொடர்ந்து சென்று மிரட்டியுள்ளார். இந்தச் சாலை வன்முறை குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.








