சுபாங் ஜெயா, சன்வே லகூனில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்து தொடர்பாக தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தடயவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விபத்துக்கான உண்மையான காரணம், அனைத்து ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தெரியவரும் என்று அதன் தலைமை இயக்குநர் Hazlina Yon தெரிவித்தார்.
தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், இதற்கு, பொறுப்பான தரப்பினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த விபத்தில், ரோலர் கோஸ்டரில் பயணித்த 22 பேரில் 10 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.
இதனிடையே, “ரோலர் கோஸ்டரின் உலோகப் பகுதியில் நீண்டகால பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான அழுத்தத்தால் ஏற்பட்ட பலவீனம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சன்வே குழும நிறுவனர் டான் ஸ்ரீ ஜெஃப்ரி சியா தெரிவித்துள்ளார்.








