புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையான என்.கே.வி.இ -யில், சுபாங் மற்றும் ஷா ஆலம் இடையே நிகழ்ந்த லோரி விபத்தால், மேம்பாலத்தின் அருகிலிருந்த பெரிய விளம்பரப் பலகை கீழே உள்ள சாலையில் சரிந்து விழுந்தது.
இன்று மதியம் 12 மணியளவில் எம்.எஸ்.யூ அருகே, தெற்கு நோக்கிய 8.8 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பிளஸ் மலேசியா தெரிவித்துள்ளது.
விபத்தால் அவசரப் பாதை, இடதுபுற மற்றும் நடுப்பாதைகள் முடக்கப்பட்டன. சரிந்து விழுந்த விளம்பரப் பலகை கீழே உள்ள சாலையையும் மறைத்ததால், சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையை மறித்த பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாலை 5.47 மணியளவில் பாதிக்கப்பட்ட பகுதி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டதாக பிளஸ் தெரிவித்துள்ளது.








