மைபிபிபி கட்சியின் தலைவராக டத்தோ மக்லின் டென்னிஸ் டிக்ருஸ் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அக்கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற மறுசீராய்வு விண்ணப்பத்திற்கு தேசிய சட்டத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கங்களின் பதிவு அலுவலகமான ரொஸ் சார்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான கூட்டரசு வழக்கறிஞர் முஹமாட் ஹைருல்க்ராம் ஹைருடின்,தமது வாதத்தில் கேவியஸின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காரணம், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை விசாரணை செய்யவோ அல்லது அவை குறித்து முடிவு செய்யவோ நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை. அவை 1966 ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் 18 சி பிரிவுக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மைபிபிபி யின் தேசியத் தலைவராக டத்தோ மெக்லினை அங்கீகரித்து இருக்கும் ரொஸ்ஸின் நியமனத்தை ரத்து செய்வதற்கு கேவியஸ் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான வாதங்களை இரு தரப்பினரும் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இம்மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்


