மைபிபிபி கட்சியின் தலைவராக டத்தோ மக்லின் டென்னிஸ் டிக்ருஸ் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அக்கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற மறுசீராய்வு விண்ணப்பத்திற்கு தேசிய சட்டத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கங்களின் பதிவு அலுவலகமான ரொஸ் சார்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான கூட்டரசு வழக்கறிஞர் முஹமாட் ஹைருல்க்ராம் ஹைருடின்,தமது வாதத்தில் கேவியஸின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காரணம், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை விசாரணை செய்யவோ அல்லது அவை குறித்து முடிவு செய்யவோ நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை. அவை 1966 ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் 18 சி பிரிவுக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மைபிபிபி யின் தேசியத் தலைவராக டத்தோ மெக்லினை அங்கீகரித்து இருக்கும் ரொஸ்ஸின் நியமனத்தை ரத்து செய்வதற்கு கேவியஸ் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான வாதங்களை இரு தரப்பினரும் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இம்மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!


