மைபிபிபி கட்சியின் தலைவராக டத்தோ மக்லின் டென்னிஸ் டிக்ருஸ் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அக்கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற மறுசீராய்வு விண்ணப்பத்திற்கு தேசிய சட்டத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கங்களின் பதிவு அலுவலகமான ரொஸ் சார்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான கூட்டரசு வழக்கறிஞர் முஹமாட் ஹைருல்க்ராம் ஹைருடின்,தமது வாதத்தில் கேவியஸின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காரணம், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை விசாரணை செய்யவோ அல்லது அவை குறித்து முடிவு செய்யவோ நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை. அவை 1966 ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் 18 சி பிரிவுக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மைபிபிபி யின் தேசியத் தலைவராக டத்தோ மெக்லினை அங்கீகரித்து இருக்கும் ரொஸ்ஸின் நியமனத்தை ரத்து செய்வதற்கு கேவியஸ் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான வாதங்களை இரு தரப்பினரும் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இம்மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


