Mar 20, 2026
Thisaigal NewsYouTube
டிரம்ப் வருகை: அன்வாரின் முடிவல்ல, ஆசியான் தலைவர்களின் ஒருமித்த தேர்வு!
தற்போதைய செய்திகள்

டிரம்ப் வருகை: அன்வாரின் முடிவல்ல, ஆசியான் தலைவர்களின் ஒருமித்த தேர்வு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.05-

மலேசியாவில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரப்பின் வருகை குறித்து எழுந்த சர்ச்சைக்குத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி விளக்கம் அளித்துள்ளார். டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தனிப்பட்ட முடிவல்ல என்றும், 10 ஆசியான் நாடுகளின் தலைவர்களும் ஒருமனதாக எடுத்த கூட்டு முடிவு என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஆசியான் அமைப்பின் தற்போதையத் தலைவராக மலேசியா, அதன் கூட்டாளிகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். இருப்பினும், இந்தக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டாலும், காஸா, பாலஸ்தீனம் விவகாரத்தில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றாது என்று ஸாஹிட் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆசியான் தலைவர்களின் ஒருமித்த முடிவை மலேசியா மதிக்கும் அதே வேளையில், பாலஸ்தீன மக்களுக்கான உரிமைப் போராட்டத்தைத் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து