கோலாலம்பூர், நவ.12-
கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, புக்கிட் ஓயுஜியில் கட்டடம் ஒன்றில் நுழைவதற்கு பெட்ரோல் வெடிகுண்டை பயன்படுத்தியதகாக நம்பப்படும் பொருள் பட்டுவாடா பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இன்று அதிகாலை 4.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் நடந்த இடத்திலேயே 28 வயதுடைய நபரை போலீசார் வளைத்துப்பிடித்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகட் இசா தெரிவித்தார்.
அந்த நபரிடமிருந்து எட்டு வெடிகுண்டு போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








