ஜோகூர் பாரு, ஜூலை.26-
வரும் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மலேசியாவை Super El Niño நிகழ்வு தாக்கக்கூடும் என்பதால், தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக UKM எனப்படும் Universiti Kebangsaan Malaysia பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றத் துறையின் மூத்த விரிவுரையாளர் Dr Zulfaqar Sa’adi வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளதால், அணைகளில் இருந்து தண்ணீரை முன்கூட்டியே திறந்துவிடும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பருவமழை குறைந்தால், வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








