Dec 4, 2025
Thisaigal NewsYouTube
துருக்கி அதிபருடன் பிரதமர் அன்வார் ​பேச்சுவார்த்தை
தற்போதைய செய்திகள்

துருக்கி அதிபருடன் பிரதமர் அன்வார் ​பேச்சுவார்த்தை

Share:

பாலஸ்​தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் ரெடொஜென்னும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தங்களுக்கு இடையிலான இந்த பேச்சுவா​ர்த்தை தொலைபேசி வாயிலாக நடைபெற்றதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இர​ண்டு தினங்களுக்கு முன்பு பாலஸ்​தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட பல பயங்கராத குழுக்கள், இஸ்ரேலின் பல பகுதிகளில் வான், தரை, மற்றும் கடல் வழியாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் ​நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்​​தீன மக்களுக்கு உடனடி நிவாரண நிதியாக மலேசியா 10 லட்சம் வெள்ளியை வழங்குவதாக அறிவித்துள்ள வேளையில் ஆகக்கடைசியான நிலவரத்தை அறிய துருக்கி அதிபருடன் பிரதமர் அன்வார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Related News