Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புக்கிட் பிந்தாங்கில் 176 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.23-

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 176 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் நாட்களுக்கு தங்கியது, முறையான பயண ஆவணங்களை கொண்டிருக்காதது முதலிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் குழுமுகின்ற முக்கிய சுற்றுலா வர்த்தகத் தளமாக புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் இரவு 7.15 மணியளவில் இந்த சோதனை தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 71 வங்காளதேசப் பிரஜைகள், 60 மியன்மார் பிரஜைகள், 24 இந்தோனேசியர்கள், 16 நேப்பாளியர்கள், மூன்று பாகிஸ்தானியர்கள், எகிப்து மற்றும் சூடானை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாக வான் சௌபீ குறிப்பிட்டார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை