Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புக்கிட் பிந்தாங்கில் 176 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.23-

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 176 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் நாட்களுக்கு தங்கியது, முறையான பயண ஆவணங்களை கொண்டிருக்காதது முதலிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் குழுமுகின்ற முக்கிய சுற்றுலா வர்த்தகத் தளமாக புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் இரவு 7.15 மணியளவில் இந்த சோதனை தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 71 வங்காளதேசப் பிரஜைகள், 60 மியன்மார் பிரஜைகள், 24 இந்தோனேசியர்கள், 16 நேப்பாளியர்கள், மூன்று பாகிஸ்தானியர்கள், எகிப்து மற்றும் சூடானை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாக வான் சௌபீ குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி