56 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 700 கிலோகிராம் எடையுள்ள ketum இலைகளை தாய்லாந்திற்கு கடத்த முயற்சித்த சிண்டிகேட்டுகளின் நடவடிக்கையை மலேசிய இராணுவப் படையினர் முறியடித்தனர்.
நேற்று காலை 6.30 மணியளவில் Malaysia - Thailand எல்லைக்கு அருகில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான Mitsubishi Pajero ரக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் அதில் ketum இலைகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் மலேசிய காலாட்படை இரண்டாம் பிரிவின் தலைமையகம் ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட காரில் 70 பொட்டலங்களை உள்ளடக்கிய 700 கிலோகிராம் Ketum இலைகள் கைப்பற்றப்பட்டதாக அது தெரிவித்திருந்தது.
மொத்தம் 81 ஆயிரம் மதிப்பிலான ketum இலைகள் உட்பட சம்பந்தப்பட்ட காரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக Kuala Nerang காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அது மேலும் தகவல் வெளியிட்டிருந்தது.








