Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மாணவனைப் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மாணவனைப் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்,06-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவன் ஒருவனைப் பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக ஓர் ஆசிரியரும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியரும் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இருவரும் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

பணி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியரான 59 வயது சூங் கியான் பெங் மற்றும் ஓர் ஆசிரியரான 47 வயது லாவ் தெயிக் ஹுவா ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஓர் இடைநிலைப்பள்ளியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யம் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஆசிரியர் சேவையைச் சேர்ந்த இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு